கற்பனை செய்தால்
கவிதை வருமாம்!
அப்படியென்றால் என்
வாழ்க்கையே கற்பனையில்
தான்- இப்படிக்கு பார்வையற்றவன்!
(உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)
Thursday, May 20, 2010
Saturday, May 15, 2010
விளங்காத விழிப்புணர்ச்சி!

"காற்றை மாசுபடுத்தாதீர்" என்று
புகைவிடும் வண்டியில்!
"குடிநீரை வீணாக்காதே" என்று
சினிமா மழைக்கு வந்த லாரியில்!
"மரம் வளர்ப்போம்" என்று
மரத்தை வெட்டியெடுத்து சென்ற வண்டியில்!
"மண் அரிப்பைத் தடுப்போம்" என்று
திருட்டு மணல் லாரியில்!
"குடி குடியைக் கெடுக்கும்" என்று
மதுபான குடுவையில்!
"குழந்தைத்தொழிலாளி முறையை ஒழிப்போம்" என்று
சிறுவன் ஒட்டிய சுவரொட்டி விளம்பரத்தில்!......
ஒன்றும் விளங்கவில்லை மக்களுக்கு.
(உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)
Subscribe to:
Posts (Atom)