Snapdeal

Thursday, April 15, 2010

என்னவளுக்காக ஏங்குபவன்




















என்னவளே! என்னைவிட்டு ஏன் பிரிந்தாய்
என்ற காரணம் தெரியாமலே தினமும்
எரிந்து கொண்டிருக்கிறேன்
என்தவறு செய்தேன் நான்
எதற்கு இந்த ரண வலி

எண்ணற்ற முயற்சிகள் செய்தும்
ஏமாற்றமே மிஞ்சியது
என் மனம் புரிந்தவளே இப்போது
என்னாயிற்று உனக்கு

எப்படி பிரிய மனம் வந்தது எனைவிட்டு
எங்கே செல்வேன் உனைவிட்டு
எந்தன் மனக்காயங்களின் வலிகளை
எவ்வாறு எடுத்துரைப்பேன்
என் காயத்திற்கான மருந்தினை
எவரிடம் கேட்பது - இப்படி

எதையும் உன்னிடம் கேட்க
கூட வாய்ப்பு கொடுக்க
மறுக்கும் உனக்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்
எஞ்சிய காலங்களிலும்!!


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

1 comment:

Katz said...

காதலின் வலி கொடுமையானத. Please remove the text verification.