Snapdeal

Wednesday, July 21, 2010

சிக்னல் விழுந்தது காதல் மலர்ந்தது



மாலை நேரத்தில் சிக்னலில்
நின்றுகொண்டிருந்தேன் என்
வாகனத்தில் மோதி நின்றாய்
திரும்பி பார்த்தேன் எதுவும்
உடையவில்லை
உன் முகம் பார்த்தேன் என் இதயம்
உடைத்துவிட்டாய்

சாரி கேட்டாய் நானும் சரி
என்றேன் சராசரி மனிதனாய்
சில வினாடிகள் நான் சிலை
கல்லென நின்றேன்
சற்று நேரத்தில் பச்சை விளக்கு
சல்லென நீ பறந்தாய்

பின்தொடர்ந்து தெரிந்துகொண்டேன்
உன் முகவரியை
பின் இரவில் எழுதத்தொடங்கினேன்
இக்கவிதையின் முதல் வரியை

காதல் படிந்துவிட்டது என் இதயத்தில்
உன் அழகை ரசித்து ரசித்து மடிந்துவிட்டது
என் இரவு - விரைவில் சந்திப்போம்
காதல் சிக்னலில்


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

2 comments:

Katz said...

//பின்தொடர்ந்து தெரிந்துகொண்டேன்
உன் முகவரியை
பின் இரவில் எழுதத்தொடங்கினேன்
இக்கவிதையின் முதல் வரியை

காதல் படிந்துவிட்டது என் இதயத்தில்
உன் அழகை ரசித்து ரசித்து மடிந்துவிட்டது
என் இரவு - விரைவில் சந்திப்போம்
காதல் சிக்னலில்//

அருமை.

Katz said...
This comment has been removed by the author.