
மாலை நேரத்தில் சிக்னலில்

நின்றுகொண்டிருந்தேன் என்
வாகனத்தில் மோதி நின்றாய்
திரும்பி பார்த்தேன் எதுவும்
உடையவில்லை
உன் முகம் பார்த்தேன் என் இதயம்
உடைத்துவிட்டாய்
சாரி கேட்டாய் நானும் சரி
என்றேன் சராசரி மனிதனாய்
சில வினாடிகள் நான் சிலை
கல்லென நின்றேன்
சற்று நேரத்தில் பச்சை விளக்கு
சல்லென நீ பறந்தாய்
பின்தொடர்ந்து தெரிந்துகொண்டேன்
உன் முகவரியை
பின் இரவில் எழுதத்தொடங்கினேன்
இக்கவிதையின் முதல் வரியை
காதல் படிந்துவிட்டது என் இதயத்தில்
உன் அழகை ரசித்து ரசித்து மடிந்துவிட்டது
என் இரவு - விரைவில் சந்திப்போம்

2 comments:
//பின்தொடர்ந்து தெரிந்துகொண்டேன்
உன் முகவரியை
பின் இரவில் எழுதத்தொடங்கினேன்
இக்கவிதையின் முதல் வரியை
காதல் படிந்துவிட்டது என் இதயத்தில்
உன் அழகை ரசித்து ரசித்து மடிந்துவிட்டது
என் இரவு - விரைவில் சந்திப்போம்
காதல் சிக்னலில்//
அருமை.
Post a Comment