Snapdeal

Sunday, July 25, 2010

நூலகத்தில் கண்ட கவிதை

கனவிலே கண்ட கவிதையை
காண்கிறேன் நூலகத்தில்

வெண்முகப்பில் உருண்டோடும்
கருமணி கவிகள் இரண்டு
அதன் மேல் திரண்டோடும்
வில் கவிகள் இரண்டு

அதிலிருந்து சரிந்தோடும்
நாதஸ்வர கவி ஒன்று
அதன் கீழ் விரிந்தோடும்
செவ்விதழ் கவி இரண்டு

இருமருங்கிலும் சுருண்டோடும்
நூல் குறியீடுகள் இரண்டு
கவிதைகளை படித்து படித்து
குறியிடுகிறது காற்று

இவையெல்லாம்
கவிதைநூலில் இல்லை
காகிதத்தில் இல்லை
கரும்பலகையில் இல்லை
கறுப்பு நூல் நெய்த உடையில்
வெள்ளை கவிப்பாவையாய் நீ

(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி).


No comments: