Snapdeal

Wednesday, July 28, 2010

என் காதல் பொக்கிஷங்கள்

வருடங்கள் அழிந்தாலும்
வாழ்வு அழியாமல்
உன்வாழ்த்து அட்டைகள்

மை உலர்ந்தாலும்
உணர்வுகள் உலராமல்
உன் கடிதங்கள்

அன்பு குறைந்தாலும்
அழகு குறையாமல்
உன்அன்பளிப்புகள்

நாட்கள் கரைந்தாலும்
நூற்கள் நையாமல்
நீ கொடுத்த கைக்குட்டை

மணம் இழந்தாலும்
மென்மை இழக்காமல்
உன் கூந்தலில் சூடிய
மலரின் இதழ்கள்

நீ வெறுத்து போனாலும்
புன்முறுவலோடு உன்
புகைப்படம்

நீ மறந்து போனாலும்
இறந்து போகாமல்
உன் நினைவுகள்

இத்தனையும்
சேர்த்து வைத்துள்ளேன்
உன்னை தவிர

(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க.)

2 comments:

Siva said...

கவிதை அருமை.... ரசிக்கத்தக்க வரிகள்... அனுபவித்து எழுதுவீர்களோ

நீ வெறுத்து போனாலும்
புன்முறுவலோடு உன்
புகைப்படம்

அன்பு குறைந்தாலும்
அழகு குறையாமல் உன்
அன்பளிப்பு பொருட்கள்

இவை நான் மிகவும் ரசித்த வரிகள்

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

@)Siva said...

// கவிதை அருமை.... ரசிக்கத்தக்க வரிகள்... அனுபவித்து எழுதுவீர்களோ

நீ வெறுத்து போனாலும்
புன்முறுவலோடு உன்
புகைப்படம்

அன்பு குறைந்தாலும்
அழகு குறையாமல் உன்
அன்பளிப்பு பொருட்கள்

இவை நான் மிகவும் ரசித்த வரிகள்//

அனுபவம் பெற்றது போல்
பாவித்து எழுதிய கவிதை

வருகைக்கும் உங்களுடைய கருத்துக்கும் நன்றி